Tuesday, July 4, 2017

இலங்கையில் ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் ஆதி இரும்புக்கால மக்களே ஆவார் இக் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆராய்க.

Image result for இலங்கையில் பெருங்கற்காலம்
ஆனைக்கோட்டை
 இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வாழ்விலருந்து பெற்ற அநுபவங்களை கொண்டு தம்மை வளப்படுத்தி பிற்பட்ட காலங்களுக்குரிய பல்வேறுபட்ட பண்பாட்டு அம்சங்களுக்குரிய அடித்தளம் இட்டுக்கொடுத்ததோடு ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவ்கள் என்ற வகையில் பெருங்கற்கால மக்கள் சிறப்பிடம் பெறுகின்றனர். பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகானவை உருவ வழிபாடுகளாகி உருவ வெளிப்பாடுகள் இடம்பெற கலை வளர்ச்சியடைந்தன.

Image result for இலங்கையில் பெருங்கற்கால கலை
கந்தரோடை, 
     Megalithig periad என அழைக்கப்படும் இப் பண்பாடானது இலங்கையில் ஏறத்தாழ கி.மு 800- கி.மு 1ஆம் நூற்றண்டுவரை நிலவியதாக கந்தரோடை, பொம்பரிப்பு, கெடிகே ஆகிய இடங்களில் பெறப்பட்ட விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இப் பெருங்கற்கால  பண்பாடானது ஏறத்தாழ இலங்கையில் 40 இற்கு மேற்பட்ட இடங்களில் நிலவியதனை இப் பண்பாண்டு அடையாளச் சின்னங்களான ஈமச்சின்னங்கள், குடியிருப்புக்கள், குளங்கள் வயல்கள், என்பன அடையாப்படுத்துகின்றன. www.noolaham.net/project/01/33/33.txtஇவ்வகையில் கந்தரோடை, ஆனைக்கோட்டை, மாந்தை, பூநகரி, பொம்பரிப்பு, அக்குறுகொட, அநுராதபுரம், மாமடுவ போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை. இவ் இடங்களில் இப் பண்பாடானது இடத்துக்கிடம் வேறுபட்ட காலங்களில் தோன்றியிருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
Image result for பெருங்கற்காலம்      இக் கால மக்களால் கட்டமைக்கப்பட்ட கட்டடக் கலையினை நோக்கும் போது நம்பிக்கையின் அடிப்படையில் இறந்தவரது உடலை புதைத்து படையல்கள் வைக்க வேண்டும் என்ற சமய நம்பிக்கையின் அடிப்படையில் இறந்தவரது உடலை எலும்புகளை புதைக்க கட்டடங்களை கட்ட முற்பட்டனர். இதனால் பௌதீக சூழலுக்கு ஏற்ப கல்லறைகள், கற்திட்டைகள், கல் மேசைகள், துளையுடைய கல்லறைகள், தொப்பிக்கல், குடைக்கல், குடைவரைக்குகை, கற்குவை, குத்துக்கல், நடுகல் எனப் பல வகையிலும் ஈமச்சின்னங்களை மேற்கொண்டனர்https://www.youtube.com/watch?v=Ir-ibl3gwRY. இவை சமய நோக்கிற்காக அமைக்கப்பட்டாலும் பொறிமுறையில் கலை நுட்பத்தையே வெளிப்படுத்துகின்றன. கல்றைகள் என்பவை பொதுவாக நான்கு பெரிய கற்களால் அறைகள் போன்று அமைக்கப்பட்டவையாகும். இக் கல்லறைகளில் பக்கக் கற்கள் நிலத்தின் கீழ் அமைய இவற்றை மூடக் கல்லாலான மூடிகளும் காணப்படுவத வழக்கமாகும். இதனை விட கல்லறைகளை அரைவாசியை நில மட்டத்திற்கு கீழும் ஈமச் சின்னங்களை பெரிய கல்லால் கவிழ்த்து குடை போல் தோற்றமளிக்கும் வகையில் தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி கலையினை வளர்த்தனர். இவ் அமைப்பு முறையே குடைவரைக் குகை என்பதும் பெருங்கற்கால மக்களின் கட்டடக்கலையை வெளிப்படுத்தும் ஈமச்சின்ன வகையாகும்.
     Image result for பூநகரி பெருங்கற்கால மையம்பூநகரியில் இக் கால கட்டடக் கலையை வெளிப்படுத்தும் மண் வளையற் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சட்ட மணண்ணைக் கொண்டு கிணறுகளை கட்டியமை பெருங்கற்கால மக்கள் சிறந்த வளத்தை பயன்படுத்தி கட்டடக் கலையை வளர்த்தெடுத்துச் சென்றமையைக் காட்டுகின்றது. இவ் கிணற்றின் மேற் பாகம் நட்சத்திர வடிவில் 2 ½ அடி விட்டடத்தை உடையது. 3 அடி ஆழமுடைய இதன் கீழ்ப்பாகம் ஐந்து மண் வளையல்களை ஒன்றாகப் பொருத்தி வட்டவடீவிலே கட்டப்பட்டுள்ளது. இவற்றை முல்லைத்தீவ, மன்னார், வல்லிபுரம் ஆகிய இடங்களில் கண்டுபிடித்த மண் வளையற் கிணறுகளிலும் காணலாம். அவ்வாறே பொம்பரிப்புக்கு அண்மையிலுள்ள புயடபந விகாரை பெருங்கற்கால பண்பர்ட்டுக்குரிய கட்டடமாகும். தேமத ஓயா எனும் இடத்தில் கி.மு 3ஆம் நூற்றர்ண்டைச் சேர்ந்த சாசனத்தில் செங்கற்கள் பற்றிய குறிப்பு காணப்படுவதுடன் தூபராம தொடக்க கட்டடத்தில் கி.மு 3ஆம் நூற்றாண்டிலே செங்கல் உபயோகிக்கப்பட்டன என கூறப்படுகின்றுது. அநுரர்தபுரத்திலுள்ள ஜயஸ்ரீமகாபோதிக்காக ஓர போதிகர கி.மு 3ஆம் நூற்றாண்டில் பெருங்கற்கால இறுதியில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. கந்ரோடையில் பெருங்கற்கால பண்பர்ட்டுக்குரிய பௌத்த வழிபாட்டுக்குரிய மையங்களும் சில புதைகுழிக்குரிய அமைப்புக்களும் கற்பவளக் கல்லினால் அரிந்து அறுத்த கற்கள் போன்று உருவாக்கப்பட்டுள்ளன. தொன்னிந்திய திராவிடக: கட்டடக் கலையில் பெரும் செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்த ஆந்திர நாட்டிலுள்ள அமராவதியின் கட்டடக் கலை மரபானது கந்தரோடையின் கலைக் கூறுகளிலும் பெருஞ் செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்ததை காணலாம்.
       இவை யாவும் பெருங்கற்காலத்தில் கட்டடக் கலையின் உருவாக்கத்தினையும் அதன் படிப்படியான வளர்ச்சி நிலையினையும் பிற்கால கட்டடங்கள் அதாவது கோயில்கள், விகாரங்கள் என்பன உருவாக்கப்படவும் அடிப்படையாக அமைந்தது என்றால் மிகையாகாது. தொழில்நுட்பங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தி குளம், குளக்கட்டு, அணைக்கட்டு, போன்ற கட்டுமான கலையை வளப்படுத்தி பிற்காலம் தலம், தீர்த்தம் எனப்பட்ட இந்துக் கோயில்கள், பௌத்த ஸ்தூபி கலைகள் அமைக்கப்படவும் இக் கால கலை அடித்தளமானது.Image result for பெருங்கற்கால மட்பாண்டங்கள்
        சுடுமண் சிற்பங்கள், சிலைகளும் உருவாக்கப்பட்டன. தென் மாகாணத்தின் பண்டத்தாரா எனும் இடத்தில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களிற் சுடுமண் சவப்பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனோடு தப்போவ எனும் இடத்தில் ¼  ஏக்கர் நிலத்தில் இருவகைப் பருமனில் அமைக்கப்பட்ட யானை உருவச் சவப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தம்மடுவவிலும் மனித, விலங்குடன் கூடிய சுடுமண் சவப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கந்தரோடையில் இக் கால பௌத்த சிற்பங்கள் தலையற்ற நிலையில் கிடைத்துள்ளன. வெண் வைரக் கல்லாலான புத்தர் சிலைகள் அமராவதிக் கலை மரபை எடுத்துக்காட்டுகின்றன.
Image result for இலங்கையில் பெருங்கற்கால பண்பாடு       தாழிகள், பேழைகள் என்பவற்றைச் செய்து இறந்தவர்களின் உடலை எலும்புகளை புதைத்தனர். இவற்றை ஒரே மாதிரி செய்யாது பல வகையிலும் செய்ய முற்பட்டதால்  மடபாண்டக்கலை மேன்மை பெற்றது. கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களை வனைவதில் பின்பற்றப்பட்ட மூலப் பொருட்களின் செய்கையும் தொழில்நுட்ப அறிவும் மிக உயர்ந்த தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. அவற்றுள் தாழிகள் பானைகள், சட்டிகள், கூசாக்கள், வட்டில்கள், தட்டுக்கள், மண் விளக்குகள் குறிப்பிடத்தக்கது.
    Image result for கந்தரோடை ஈமச்சின்னங்கள்  மேலும் இவ் மட்பாண்டங்களில் வரையப்பட்ட பல வகைக் குறியீடுகள் வரையப்பட்டமையானது ஓவயக் கலையை காட்டுகின்றது. குறியீடுகளாக சுவஸ்திகா, முத்திரைச் சூலம், மீன், நெற்கதிர், மலை, ஆறு, நந்தி பாதம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
     இக் கால கலை நுட்பத்தின் சிறப்பான அம்சமாக அமைவது இக் கால மக்களால் பயன்படுத்தப்பட்ட மணி வகைகள், ஆபரணங்கள், அவற்றுள் கை வளையல்கள் கழுத்து மாலைகள், உலோக காற்சலங்கைகள் என்பன கலை ரீதியாக கொண்ட  ஆர்வத்தை சுட்டுகின்றது. கந்தரோடையில் காப்புக்கள், மோதிரங்கள், காதணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
     மட்பாண்டங்களில் காணப்படும் கிராபிடிக் குறியீடுகள் வளர்ச்சியடைந்து பிராமி எழுத்தாக தோற்றம் பெற்றன. எழுத்துக்கலை கட்டமைக்கப்பட்ட காலமாக காணப்படுகின்றது.
     உலோகக் கலையும் வளர்க்கப்பட்டது. இதற்கான காரணம் இரும்புப் பயன்பாடு ஏற்படுத்தப்பட்டமையாகும். கந்தரோடையில் கண்டெடுக்கபட்ட காப்புக்கள், மோதிரங்கள், காதணிகள் பெருமளவு உலோகத்தால் செய்யப்பட்டன. மேலும் திஸ்ஸமகாராமமையில் ஈய உலோகத் துண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்
     பெருங்கற்கால மக்கள் மத்தியில் மிகை உற்பத்தி காணப்பட்டதால் ஓய்வு நேரத்தில் பல கலைப் படைப்புக்களை உருவாக்கியிருந்தனர். இவ் கலை வடிவங்களுக்கு வித்திட்டவை ஈமத்தாழிகள், கற்படுக்கைகள், கல்லறைகள், கற்திட்டை, என்றால் மிகையாகாது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடக் கலை, சிற்பம், ஓவியம் போன்ற கலைகள் கட்டமைக்கப்பட்டதோடு பிற்கால கலை உருவாக்கத்திற்கு வித்திட்ட காலமாக பெருங்கற்காலம் விளங்குகின்றது.
உசாத்துணைகள்
இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், 2006, குமரன் புத்தக இல்லம், பக் 88-142.
கிருஷ;ணராஜா.செ, இலங்கைப் பண்பாட்டுப் பரிணாமத்தின் அடிப்படைகள், AB Creator and publishers; 2012, பக் 155-202.

P.sagikka
3rd year Archaeology student
University of Jaffna.



No comments:

Post a Comment

இலங்கையில் ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் ஆதி இரும்புக்கால மக்களே ஆவார் இக் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆராய்க.

ஆனைக்கோட்டை  இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வா...