Sunday, July 2, 2017

இலங்கையில் நாணயவியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள்

Image result for இலங்கை பிராமி நாணயங்கள்
             மனித நாகரிக வரலாற்றில் நாணயங்களின் தோற்றம் புதிய காலகட்டதை குறித்து நிற்கின்றது. இலங்கையை பொறுத்தவரை நாணயந்களின் தோற்றம் வளர்ச்சி இந்திய நாணயங்களின் வரலகற்றோடு இணைத்த ஒன்றாகும். இலங்கை வரலாற்றை அறிய உகவும் மூலாதாலங்களில் ஒன்றான நாணயங்கள் பற்றி ஆராய்ந்தவர்களை நோக்கும் போது 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையில் கிடைத்த நாணயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதைத் தொடக்கி வைத்தவர்களில் ஜரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உயர் பதவியில் இருந்த ஆங்கிலேயருக்கு முக்கிய பங்குண்டு. முதன் முதலில் பிறின்செப் என்ற அறிஞர் தான் 1858 இல் இந்தியக் தொல்பொருளில் பற்றிய தொகுப்பில் இலங்கையில் கிடைத்த பல்வேறு காலப்பகுதிக்குரிய நாணயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

                இதில் யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் உட்பட்ட சில தமிழ் நாணயங்களுக்குரிய புகைப்படங்களை கட்டுரையில் பிரசுரித்த போதிலும் தமிழ் மொழியில் பயிற்சியில்லாத காரணத்தால் அவற்றை அவரால் அடையாளப்படுத்த முடியவில்லை. இதே காலப்பதியில் தான் ராய்டேவிட், பெல், வில்லியம் கைகர், ஸ்ரில் போன்ற அறிஞர்களும் இலங்கையின் பல வட்டாரங்களில் கிடைத்த பல வகை நாணயங்களை ஆராய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டனர்.www.dinamalar.com › ... › தமிழ்நாடு
             கி.பி  1885 இல் வட இலங்கையில் முல்லைத்தீவில் கிடைத்த கிடைத்த நாணயங்கள் பற்றி பாக்கரும் கி.பி 1917 இல் கந்தரோடையில் கிடைத்த நாண   நாணயங்கள் பற்றி பீரிஸ்சும் ஆராய்ந்ததைத் தொடர்ந்து இலங்கை நாணயங்கள் பற்றிய ஆய்வில் வட இலங்கை நாணயங்களும் முக்கியம் பெறுகின்றன. கி.பி 1924 இல் கொட்றிங்டனால் பிரசுரிக்கப்பட்ட The Ceylon coins currency என்ற நூல் இலங்கை நாணய வரலாறு பற்றிக் கூறும் முதல் நூலாகும். இது போன்ற ஓர் நூல் இதுவரை வெளிவரவில்லை.https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமி
        Image result for இலங்கை சேது நாணயங்கள்  அண்மைக் காலங்களில் பெருமளவு நாணயங்கள் அகழ்வாய்வின் போதும் மேற்படை ஆய்வின் போதும் பெறப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பரணவிதான, ஸ்ரீசோம, அமலசிங்க, வேல்புரி, சிறிப், குணசேகர, குலத்துங்கா போன்ற அறிஞர் ஆய்வை மேற்கொண்டனர். அண்மையில் வீரக்கொடி, பொபி ஆராயிச்சி, ராஜவிக்கிரமசிங்கே இணைந்து எழுதிய நூலும் கொட்றிங்டன் நூலுக்கு பின் இலங்கை நாணய வரலாற்றைக் கூற எழுந்த முக்கிய நூல்களாக கூறப்படுகின்றன. ஆயினும் கொட்றிங்டன் நூலோடு ஒப்பிடுகையில் இந் நூல் இலங்கையில் கிடைத்த நாணயங்கள் பற்றி விரிவான தரவுகளையோ அல்லது அவற்றின் வரலர்ற்றையோ முழுமையாகத் தருவதாக கூறமுடியாது.https://www.youtube.com/watch?v=if8sRfn4P98
Image result for இலங்கை நாணயங்கள் ஆய்வு       பொதுப்பட இலங்கையில் கிடைத்த நாணயங்கள் குறித்து ஆராயப்பட்ட அதே வேளை தமிழ் அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வட்டார அடிப்படையில் வட இலங்கையில் கிடைத்த நாணயங்களும் ஆராயப்பட்டன. 1971 இல் பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் சிவச்சாமி, இன்றைய தினக்குரல் பத்திரிகையின் பிரதம பதிப்பாசிரியர் சிவநேசச் செல்வன், யாழ்ப்பான தொல்லியல் கழகமும் நாணயங்களை கண்டுபிடிக்கவும் பூர்வகலா என்ற சஞ்சிகையை வெளியிட்டது.
        மேலும் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ரோசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் பத்மநாதன் போன்றோரும் ஆய்வை மேற்கொண்டனர். மாதோட்டத்தில் கிடைத்த மூன்று வகை நாணயங்களை ஆராய்ந்த சாசனவியல் அறிஞரான மகாதேவன் அவற்றை அரிய நாணயங்கள் என குறிப்பிட்டு யாழ்ப்பாண மன்னர்கள் சேது மொழி பொறித்த நாணயங்களுடன் வேறு பல நாணயங்களையும் வெளியிட்டிருக்கலாம் என கூறுகின்றார். பேராசிரியர் சிவச்சாமியின் யாழ்ப்பாணக் காசுகள், பேராசிரியர் கிருஸ்ணராஜாவின் யாழ்ப்பாண குடா நாட்டில் கிடைத்த நாணயங்கள் என்ற ஆய்வுக் கட்டுரைகளும் திரு சேயோனின் இலங்கையில் கிடைத்த பண்டைய கால நாணயங்கள் என்ற நூலும் பேராசிரியர் புஷ்ரட்ணத்தின் இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள் என்ற நூலும் நாணயப் பயன்பாட்டை வட்டார அடிப்படையில் கூற எழுந்த ஆய்வுகள் என கூறலாம்.
உசாத்துணைகள்
https://ta.wikipedia.org/wiki/சேது_நாணயம்
https://ta.wikipedia.org/.../தொல்லியல்_நோக்கி...
p.sagikka
3rd year archaeology student
university of jaffna.

No comments:

Post a Comment

இலங்கையில் ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் ஆதி இரும்புக்கால மக்களே ஆவார் இக் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆராய்க.

ஆனைக்கோட்டை  இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வா...