ஆனைக்கோட்டை |
இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வாழ்விலருந்து பெற்ற அநுபவங்களை கொண்டு தம்மை வளப்படுத்தி பிற்பட்ட காலங்களுக்குரிய பல்வேறுபட்ட பண்பாட்டு அம்சங்களுக்குரிய அடித்தளம் இட்டுக்கொடுத்ததோடு ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவ்கள் என்ற வகையில் பெருங்கற்கால மக்கள் சிறப்பிடம் பெறுகின்றனர். பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகானவை உருவ வழிபாடுகளாகி உருவ வெளிப்பாடுகள் இடம்பெற கலை வளர்ச்சியடைந்தன.